தற்போதெல்லாம் தரமான தமிழ் திரைப்படங்களைப் பார்பதே அபூர்வமாக உள்ளது. ரூரிஸ்ட் பமிலி, மட்ராஸ் மட்டினி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே என்னைக் கவர்ந்த படங்களாக இந்த வருடம் 2025 இல் இருந்தது.
இன்று நீண்ட நாட்களின் பின்னர் 3BHK எனும் தமிழ் திரைப்படத்தைப் பார்ததேன். சரத்குமார், தேவயாணி மற்றும் சித்தார்த் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வீடு வாங்கும் கனவை மையமாகக் கொண்டே இந்த திரைப்படம் அமைந்து இருந்தது.

பிரபு எனும் கதா பாத்திரத்தில் சித்தார்த் சிறப்பாகவே நடித்திருந்தார். பாடசாலை மாணவன் முதல் 40 வயதில் இருக்கும் நடுத்தர வயது ஆண்வரை அவர் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். இவரை விட சரத்குமார் அமைதியான நடிப்பில் ஒரு நடுத்தர வர்க்க தகப்பனாகவே நடித்திருந்தார் என்று கூறுவதை விட வாழ்ந்திருந்தார் என்றே கூறலாம். தேவயானியும் அவ்வாறே ஒரு அமைதியான குடும்பத்தலைவியாக நடிப்பில் அசத்தியிருக்கின்றார்.
சில இடங்களில் என்னடா இது ஒரே துன்பம் மேல் துன்பமாக இந்தக் குடும்பத்தைத் தாக்குவதாகக் காட்டியிருக்கின்றார்களே என்று பார்ததபோது கதை மெல்ல மெல்ல வந்து எம்மருகில் அமர்ந்துவிடுகின்றது.
ஒரு மென்பொருள் வல்லுனராக எம்மை எப்படியெல்லாம் நவீன நிறுவனங்கள் குளாய் போட்டு நமது இரத்தத்தை உறிஞ்சுகின்றன என்பதெல்லாம் பார்ககும் போது எமக்கும் சுடுவதாக உள்ளது.
வீடு வாங்குவதற்காக, திருமணத்திற்காக வங்கிகளில் கடன் வாங்கி அல்லல் பட்டோர் பல யாம் அறிவோம்.
இப்போதெல்லாம் ஜென் சீ தலைமுறையினர் பலர் இந்த அறிவுத் தெளிவு உள்ளவராகவே இருக்கின்றனர். அவரசமாக வீடு வாங்கி சமூகத்தின் வாயை அடைப்தைவிட நல்ல முறையில் பணத்தை சேமித்து முதலீடு செய்வதே மிக முக்கியமாகும்.
இந்த திரைப்படத்தின் இசையமைப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. இசை திரைப்படத்தை எங்குமே மிஞ்சவில்லை. திரைப்படத்தின் முக்கியத்துவத்தை எங்கும் பாதிக்கவில்லை. மலையாளத் திரையிசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் மலையாளப் பாணியிலேயே சிறப்பாக இசையமைத்துள்ளார்.
சற்றே பொறுமையுடன் உட்கார்ந்து பார்தது மகிழக் கூடிய திரைப்படம். எம்மைப் போன்ற மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கட்கு மிகவுமே ஒத்துப் பார்ககக்கூடிய திரைப்படம்.
Leave a Reply